திங்கள், 10 பிப்ரவரி, 2014
* யுத்தம் உண்டு! எதிரி இல்லை! * ஒரு முன் எச்சரிக்கை! இப்பதிவில் கதையின் சஸ்பென்ஸ் உடைந்து போகும் அபாயமிருப்பதால் கதையை படித்த பின் இப்பதிவை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்! பழம் அமெரிக்காவின் எல்லையற்ற சமவெளிப் பிரதேசங்களில் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்து வந்த பூர்வகுடிகள், குடியேற்ற பிரஜைகளின் வரவின் மூலமும், எளியவனை வலியவன் அழிக்கும் பூமியின் நியதியின் காரணமாகவும், தம் வசிப்பிட சுதந்திரங்களை இழந்து ஒப்பந்தங்களால் வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதிகாரி ஒருவரின் துரோகத்தால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உணவுப் பொருட்கள் செல்வது தடைபடவே தம் பெண்டு பிள்ளைகளின் பட்டினியை பொறுக்க மாட்டாமல், அருகாமை பண்ணைகளை தாக்கி கொள்ளையடிக்கும் அவல நிலைக்கு அப்பெரும் வீரர்கள் ஆளாகின்றனர்! மேலோட்டமாக சுமாரான கதையாக தோன்றினாலும், அதிகாரிகளின் சுயநலமும், பொறுப்பின்மையும், இரு பக்க எளிய மக்களின் இயல்பு வாழ்வை பெரிதும் பாதிப்பதை இக்கதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறது.....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Super
பதிலளிநீக்குநன்றி சார்!
பதிலளிநீக்கு:-)