ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014
காலத்தின் கால் சுவடுகளில்... பரந்து விரிந்த கானகங்களும் மணற்பரப்புகளும் காட்டாறுகளும் நிறைந்த இப்பூமியில், சாகஸ பயணம் மேற்கொள்ளும் தருணங்கள் யாவருக்கும் வாய்த்திடுவதில்லை! இலக்கு ஒன்றை நோக்கி பயணிக்கும் சிறு குழுவுடன் துவங்கும் கதையானது இயற்கையின் அழகுகளை வாசகனுக்கு அழகிய தெளிவான சித்திரங்களுடன் விருந்தளித்தவாறு அடர்ந்த கானகத்தினுள் அழைத்துச் செல்கிறது. கானகங்கள் தம் வசீகர முகத்தின் பின்னாக மறைத்து வைத்திருக்கும் அபாயங்களை அடுத்தடுத்து சந்தித்தவாறு இலக்கை அடையும் குழுவின் கண்முன்னாக விரிகிறது புராதன நகரொன்றின் எழிற்கோலம்! என்றோ மறைந்து போனதொரு சாம்ராஜ்யத்தின் எச்சங்களாய் நிற்கும் அந்த இடிபாடுகளிடையே பொக்கிஷம் தேடும் வெறியர்களுக்கும் அவற்றை கட்டிக் காக்கும் பழங்குடியின் இறுதிப் போராட்டத்துக்கும் இடையிலாக வந்து சேரும் சாகஸ குழுவும் அக்கண்ணாமூச்சி ஆட்டத்தில் பங்கேற்க வேண்டிய நிர்பந்தத்தில் சிக்கியது!..... அழுத்தமான கதை என்ற ஒன்று இல்லாதது மட்டுமே குறை.!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உண்மைதான்
பதிலளிநீக்கு